Sunday, December 26, 2010

ஜான் பாஸ்கோ - ஒளியைத் தேடும் கலைஞன்

         ஜான் பாஸ்கோ இந்தியாவின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களுள் ஒருவர். அவர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை. ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் பாஸ்கோவுக்கு புகைப்படக் கலை பொழுதுபோக்கல்ல. அதுதான் வாழ்க்கை. கலையை வாழ்வின் ஆதாரமாகப் பற்றிக் கொண்டவர்களுள் ஜான் பாஸ்கோவும் ஒருவர். பனி, மழை, வெய்யில் எனப் பருவங்களை நிலம், விலங்கு, மனிதன் என இயற்கையின் பல்வேறு தோற்ற நிலைகளை, இருளை, ஒளியை, வண்ணங்களை - இவ்வாறு விடாது தேடிப் பயணிப்பவர் பாஸ்கோ. தன் கலையை ஒரு போதும் வணிகமாக்குவதில் விருப்பமில்லாதவர். அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் சாம் ஆபெல் இவரை வெகுவாகக் கவர்ந்தவர். மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராக உருவெடுத்திருக்கும் போராஸ் சௌத்ரி (24)யும் பாஸ்கோவை பாதித்தவர்.

              ஒரு கலைஞருக்குரிய பலவீனங்கள் பாஸ்கோவுக்கும் உண்டு. லௌகீக அம்சங்கள் பலவற்றை கண்டுகொள்ளாதவர். தவிப்பு, நிறைவின்மை, தேடல் போன்ற மனநிலையில் எப்போதும் இருப்பவர். பெரும்பாலான விடுமுறை நாள்கள் இவரது கலைத் தேடலின் பயனநாட்களாகவே கழியும். கடந்த ஆண்டு இவர் புதுச்சேரி அல்லயன்ஸ் பிரான்சிஸில் நடத்திய “கலர்ஸ் ஆஃப் லைஃப்” எனும் புகைப்பட கண்காட்சி ஆர்வலர்களின் கவனத்தை கவருவதாக அமைந்திருந்தது. இவரது புகைப்படங்கள்  நேஷ்னல் ஜியாக்ரபி, பெஸ்ட் போட்டோகிராபி போன்ற சர்வதேச இதழ்களிலும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற உள்ளுர் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

            சென்ற ஆண்டு புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை நடத்திய புகைப்படப் போட்டியில் இவரது புகைப்படம் முதல் பரிசைப் பெற்றது. அதுபோன்று hp “பருவநிலை மாற்றங்கள்” எனும் தலைப்பில் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசை வென்றிருக்கிறார். சமீபத்தில் “புகைப்படக் கலையின் அடிப்படைகள்” எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் பாஸ்கோ நிகழ்த்தியிருக்கிறார்.

          ஆங்கில / தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பும் தீவிர ஈடுபாடும் கொண்டவர். இவரின்ன் மின்னஞ்சல் முகவரி <mjohnbasco60@gmail.com>. பாஸ்கோவின் புகைப்பங்கள் சில உங்கள் பார்வைக்கு.







No comments:

Post a Comment