Friday, December 17, 2010
எதிர்பார்ப்பிற்குறிய நூல்கள் - சென்னை புத்தக கண்காட்சி - 2011
அளம், மாணிக்கம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி இப்புதினங்களின் வரிசையில் சு. தமிழ்ச்செல்வியின் பொன்னாச்சரம் புதினம் சென்னைப் புத்தக கண்காட்சியை ஒட்டி உயிர்எழுத்து பதிப்பகத்திலிருந்து வெளிவர உள்ளது. ஆடுமேய்ப்பவர்களின் இனக்குழு வாழ்வின் அழகையும் அவலத்தையும் கீதாரி நாவலில் பதிவு செய்திருந்தார் சு. தமிழ்ச்செல்வி. வெட்டவெளியில் தங்களது ஆடுகளோடு வாழ்வை எதிர்கொள்ளும் கீதாரிகளின் மனஉறுதியை இப்புதினம் வெளிப்படுத்தியது. நாடோடி வாழ்க்கையின் இன்னல்களை பொற்றேக்காட்டிற்கு பிறகு மிகத்துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்தது கீதாரியில் தான். இதன் தொடர்ச்சியே பொன்னாச்சரமும். குறிப்பாக இவ்வினக்குழுவில் பெண்களின் அல்லற்பாடுகளை காத்திரத்துடன் பகிர்ந்து கொள்கிறது இப்புதினம். மிக ஈரமான மொழிநடையில் தனக்கே உரிய விசேஷ உரையாடல்களுடன் இப்புனைவின் பக்கங்களை விவரித்துச் செல்கிறார் புதின ஆசிரியர். எதார்த்தவாத அழகியலை விரும்பும் வாசகர்களுக்கு இப்புதினம் ஒரு கொடை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment