Thursday, December 2, 2010

அருந்ததி ராய்க்கு ஆதரவாக நிற்போம்.

                 பல்வேறு தேசிய இனங்களின் சுயத்தை அழித்து ஊதிப் பெருத்ததுதான் இந்திய பெருந்தேசியம். காஷ்மீரையும் இப்படித்தான் கபளீகரம் செய்தது. காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவோம்  என்கிற நேருவின் உறுதிமொழி காற்றில் பறக்க விடப்பட்டது.
                       காஷ்மீரிகள் ஒரு தேசிய இனம். காஷ்மீர் தனி நாடு. அது இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதில்லை. அது காஷ்மீரிகளின் தேசம். இதைத்தான் அருந்ததி ராய் சொல்கிறார். வழக்கம் போல நமது தேச பக்தர்கள் சாமியாடத் தொடங்கிவிட்டார்கள். உச்ச நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதியக் கோரியிருக்கிறது. அமெரிக்கா, பாபர் மசூதி, மோடி, மாவோயிஸ்ட் என எல்லா அரசியல் நிகழ்வுகள் குறித்தும் சிறிதும் அஞ்சாமல் கருத்து சுதந்திரத்துடன் இயங்கி வருகிறார் அருந்ததி ராய். இந்த அறச்சீற்றமும், போர்க் குணமும் எல்லா எழுத்தாளர்களுக்கும் வேண்டும். அருந்ததி ராய் கைது செய்யப்பட்டால் அது கருத்து சுதந்திரத்தின் மீது படிந்த தீமையின் நிழல். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுமையும் உள்ள எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து நிற்போம்.

No comments:

Post a Comment