நகைச்சுவை நடிகர் வடிவேலு உருவாக்கும் பாத்திரங்கள் நம் சமகாலத் தமிழர்களைப் பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. நாய் சேகர், வட்டச் செயலாளர் வண்டு முருகன், அலர்ட் ஆறுமுகம், கைப்புள்ள இப்படி அவரது பாத்திரங்களில் என்னையும் இன்னும் தமிழின் ஏன், இந்தியாவின் பல பிரபலங்களையும் அடையாளம் காண்கிறேன். தமிழர்களின் மனசாட்சி என்று கூட வடிவேலைக் கூறலாம். பண்பாட்டு மானுடவியலில் ஆர்வமுள்ளவர்கள் வடிவேலின் நகைச்சுவைச் சித்திரங்களை தீவிரமாக ஆய்வு செய்தால் அதில் செயல்படும் நமது பண்பாட்டு மானுடவியற் கூறுகள் குறித்த அபூர்வமான விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இனி பிரபலமான சிலரோடு வடிவேலின் பிரபலமான வசனங்கள் இன்றைய சூழலில் எந்தளவுக்குப் பொருந்துகின்றன... பார்ப்போம்.
கலைஞர் vs ஜெ அறிக்கைகள்
பேச்சு பேச்சா இருக்கனும்
இந்த கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்
நீயும் வரக்கூடாது
இன்னும் மக்களோடுதான் கூட்டணி எனச் சொல்லும் விஜயகாந்த்
நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது
மன்மோகன்சிங் & பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார்
வேண்டாம் அழுதுடுவேன்
ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ராஜபக்சே
வட போச்சே!
பத்திரிகைகளில் நாயைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் சாருநிவேதிதா
ஏய் சேகர் டேய் சேகர்னு கூப்பிட்டவென்லாம் இப்ப நாய் சேகர்னு மரியாதையா
கூப்பிடுறான்.
ராஜாவைப் பாதுகாக்கும் கி. வீரமணி
அவன் கருப்பா பயங்கரமா இருப்பான்
இவன் பயங்கரமா கருப்பா இருக்கான்
அவ்வப்போது மீடியாக்களில் கிலி கிளப்பும் சுப்ரமணியசாமி
கைப்புள்ள வண்டிய கிளப்பு
ஸ்பெக்ட்ரம் ராஜா
சண்டையில் கிழியாத சட்ட எங்க இருக்கு
ஈழப் பிரச்சினையில் திருமாவளவன்
அது போன வாரம், இது இந்த வாரம்
வன்னியர்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கும் டாக்டர் ராமதாசு
திரும்பவும் மொதல்ல இருந்தா
திமுக வை விமர்சிக்க ஆரம்பித்திருக்கும் அ. இ. ச. ம. க தலைவர் சரத்குமார்
நானும் ரவுடிதான்
குடிபோதையில் மூத்த கவிஞர் இளங்கவிஞருக்கு கொடுக்கும் மகாகவி பட்டம்
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்குராய்ங்களே
இலக்கியவாதிகளை பட்டியல் போடும் ஜெயமோகன்
இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டிருக்கு
நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்
இவன் அதுக்கு லாயக்கில்ல
தேர்தல் கால வாக்காளர்
அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத் தான் இருக்கு
தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்டா
ஹ ..ஹாஹ.. good ..நல்ல கற்பனை!!!
ReplyDelete