Friday, January 31, 2014

விடுதலையை ஆராதிக்கும் கவிதைகள்
கரிகாலன்
மற்றமைகள் அழிக்கப்பட்டு உலகம் ஓர் அரியணைக்குங் கீழ் வந்துகொண்டிருக்கிறது. சனநாயக அரசுளைக் காக்க அதன் லைவர்கள் துப்பாக்கிகளையேபெரிதும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சமூகத்தின் பன்மைத்தன்மையை அழிப்பது , திருவுருக்களை உருவாக்குவது , தரப்படுத்துவது , அதிகாரத்தைக் கட்டமைப்பதற்கு  சிவில் சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவதுபோன்ற திருப்பணிகள் உலகெங்கும்வெற்றிகரமாக நடந்தேறி வருகிறது. வல்லரசொன்றின் பகுதியாவதற்கு எளிய மனிதர்களை பலிகொடுப்பது தவறில்லை என்பது கார்ப்பரேட்களின் அறமாகிநெடுநாளாகிறது. இத்தகைய நவ உலகில் ஒருவர் கவிதையை விடாப்பிடியாக எழுதிக்கொண்டிருப்பது ஆச்சர்யம்தான். இத்தகு இயக்கத்திற்குசொந்தக்காரர்தான் மேஷ் பிரேதன் . தொடர்ச்சியான சமரசமற்ற கவிதை இயக்கம் இவருடையது.
‘​​கோபம் / மதுவை விட மகாபோதைஅண்ணல் அம்பேத்கர் உட்பட / இந்தியக் கடவுளர்களின் நிறம் / ​போதைஎன எழுதும் மேஷ் பிரேதன் நவீன தமிழ் இலக்கியப்போக்கில்பெரும் குறுக்கீட்டை நிகழ்த்தியவர். ​செயலூக்கமற்ற வாசிப்பு எனும் நிலையை மாற்றி பிரதியின் அர்த்த உருவாக்கத்தில் வாசகனைப் பங்கேற்கசெய்தது இவரது முக்கியமான சாதனை. உலக அளவிளான அரசியல் தத்துவப் பரிச்சயங்களுடைய இவரது கவிதைகள் அவற்றின் சாரத்தை தம்முள் நிரப்பிவைத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. வடிவம் , ​​மொழி , உள்ளடக்கம் என கவிதையின் கட்டமைப்பில் புதியன முயன்று ​​சொல் புதிதாய் , சுவை புதிதாய்சோதிமிக்க நவகவிதை டைத்த பாரதியின்தொடர்ச்சியாக டையாளம் காணப்படவேண்டியர் மேஷ்.
கோபத்தைவெளிப்படுத்த தன்னையே வருத்திக்கொண்ட காந்தியின் உள்ளமும் , இரமேஷ் பிரேதனின் கவிதை உள்ளமும் லைமனம்கொண்டவைகள்தாம். எதிர்ப்பைக்காட்டும் முக்கியமான வழிகளுள் கவிதையும் ஒன்று. கவிதை எழுதுதல் தனிமனிதசெயல்பாடாக இருப்பினும் அதுதோற்றுவிக்கும் தாக்கம் தைச் சமூகச்செயல்பாடாகப் பரிணமிக்கவைக்கிறது. டி.எஸ்.எலியட்டின் வார்த்தைகளில்சொல்லவேண்டுமென்றால் மேஷ் பி​​ரேதன் அவருடைய எதிர்ப்பை , ​கோபத்தை தன் பண்பட்டமொழியில் நித்திய மானிட உணர்ச்சியைத் தூண்டும்படி கவிதையாக்கி இச்சமூகத்திற்குகையளிக்கிறார். இவ்வகையில் இவரது சமீபத்திய  ‘மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்கவிதைத்தொகுப்பை நாம் வாழநேர்ந்த இக்காலத்தின் ஒரு கவி ஆகிருதியின் மாபெரும் துயரக்குரல் அல்லது சாபத்தின் லை வடிவம் என ரையறுக்கலாம். ‘பசிக்கிறது என்னசெய்ய / யாரைத்தொலைபேசியில் ழைக்கலாம் / முழுநேர எழுத்தாளன் என்றுசொல்வது / தமிழில் எவ்வளவுபெரியபொய் / முழுநேரப் பிச்சைக்காரன் / எவ்வளவுபெரியமெய் / மனக்குகையில் சிறுத்தை எழும் / எவ்வளவு வறிய ​​காமெடிஎன்று கவிஞர் கூறுவதுதான் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஸ்தூல நிலைமை. எழுத்துகொல்லும் என்பார் புதுமைப்பித்தன். எழுத்தாளனின் சுயத்தை அழித்துதான் பிரம்மாண்ட டைப்புகள் உருக்கொள்கின்றன.ஒரு கவிதையில் கவிஞனின் ஆயுள் ரைந்திருக்கிறது. காஃப்கா கூறுகிறபடி எழுதுவதென்பதே இயற்கையான கையில் யோதிகத்தை டைவதுதான். மேஷ்போன்றவர்களின் கவிதையும் வாழ்வும் இப்படித்தான் இருக்கிறது. வழமையான எழுத்து கைகளிலிருந்துவெகுவாக விலகியவை இவரது டைப்புகள். ‘மேரிக்க அதிபர் ஏன் என்னைதொந்தரவுசெய்கிறார்’ , ‘ தமிழ் காலனியம் ‘ , ‘ புத்தனே எங்களை ஏன்கைவிட்டீர்’ ,’பின்நவீனப் பூனைகள்எனக் கவிதைகளின் லைப்பே இவரது கவிதைவெளி எது என்பதை டையாளம் காட்டுகின்றன. ‘ ழான்ழெனேவின் / அரபுக் காதலனுக்கும் அவனது னைவிக்கும் / பிறந்த சிறுவன் / ​ழெனேவின் முகத்தோடு இருக்கிறான் ‘ , இத்தகைய வரிகள் உலகளாவிய வாசிப்பு அனுபவத்தின் அழகியல்வெளிப்பாடாக ஒரு தமிழ் வாசக மனத்தைசென்றடைவது என்பது வரவேற்கத் தகுந்த அம்சம்.
ஏகாதியபத்திய எதிர்ப்பு, உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு, மதநிறுவனங்களுக்கான எதிர்ப்பு, தமிழ் தேசிய ஆதரவு எனும் உட்கூறுகள் கொண்ட பேருரு அரசியலையும், அடையாள அழிப்பு, ஒற்றைப் பண்பாட்டுருவாக்கம் போன்ற ஆதிகச் செயல்படுகளுக்கான எதிர்ப்பு, பாலரசியல், உடலைக் கொண்டாடுதால், விளிம்புநிலை ஆதரவு, கடவுளைப் பகடி செய்தல் போன்ற நுண் அரசியலையும் இத்தொகுப்பின் கவிதைகளை ஆழ்ந்து வாசிக்கிற எவரும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ‘நாதுராம் கோட்சே / ராஜபக்சே / இருபுள்ளிகளும் / என் நெற்றி நடுவே / தியான மையமாய்த் துலங்கஎனும் கவிதை வரிகளும்உனது உடம்பு பல்கிப் பெருகுவது / அதைத் தாங்கும் வெளி நான் / நீ பன்மை / நான் ஒற்றைஎனும் கவிதை வரிகளும் மேற்க்குறிப்பிட்ட இரு அரசியல் பண்புகளை உள்ளடக்கியிருப்பகற்கான எடுத்துகாட்டுகள்
வழக்கமான கவிவடிவங்களுக்குப் பழகிய மனம் இவர் காட்டும் கவிச்சித்திரங்களைக் கண்டு குழப்பமடைகிறது, அர்த்தங்களைத்தேடுவதில் சலிப்புறுகிறது. னெனில் , இம்மனம் அதிகாரத்திற்கு சைவாக கல்வி , மத , பண்பாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் , இக்கவிதைகளோ இத்தகு மனதின் சமன்குலைப்பவையாக இருக்கிறது. ‘அவன் புதுச்சேரியில் என் முகவரிதேடி / புலியோடு திரிவதாகச்சொன்னார்கள்புலியோடு திரிபவன் என்கிற வழக்கத்திற்கு விரோதமான மிகுபுனைவுச் சித்திரம் தர்க்கத்தை மீறி கவிதையை வழிநடத்துவதாக மைந்திருக்கிறது. இதுவொரு கலக உத்தி. இத்தகைய கலக அழகியல் இத்தொகுப்பின்நெடுகிலும் காணக்கிடைக்கிறது.  
மேஷ் தன் கவிதைகளில் ஆண் / ​பெண் உடல்வேறுபாட்டை ஏற்ற இறக்கங்களுடன் கட்டமைக்கும் ஆண்மையச்சொல்லாடல்களை கவனமுடன் தவிர்க்கிறார். ஆணின் நலன் சார்ந்த பாலியல் ஒழுக்க மதிப்பீடுகளையெல்லாம் முற்றிலும் தவிர்த்துசெயலூக்கமுடையபெண் உடலை , ​பெண்ணின்பெரும் காமத்தை ஆராதிக்கும் இவரது கவிதைகள் பாலியல் குறித்த மாற்று மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. ‘உனது உடம்பின் பாதியாகி / நான் நின்ற அவலம்போதும் / நீயோ பராசக்தி / நானோபேடிஇவ்வாறு புதிய பாலியல் அறங்களை தனது கவிதைகளின் வழி உருவாக்குகிறார். ​​மேலும், பெண்ணின் பாலியல்மையங்களில் தடுமாறும் ஆணுடைய ஒற்றைப் பாலியல்மையத்தின் பலவீனத்தை இக்கவிதையில் நாம் கண்டுணர்கிறோம். பாடுபொருள் , ​மொழி இவற்றால் ஆணாதிக்கச்சொல்லாடல்களிலிருந்து விலகி ணை பாலியல் (Bisexual)  தன்மைகொண்டமொழியை உருவாக்க கவிஞர் விழைவது முக்கியமானது.
மேஷ் கவிதைகள் புதிர் தன்மையும் ஃபான்டசியும்கொண்டவை. நடுக்காட்டில் வழியைத்தொலைத்த ஒருவித மனநெருக்கடியை வழங்குபவை. பாதைதேடும் ஆர்வத்தோடு பயணத்தை ​​தொடர்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டும் வல்லமை டைத்தவை. அது விடுதலை நிறைந்த உலகமாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

 மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
வெளியீடுபுது எழுத்து , 2/205, அண்ணா நகர் , காவேரிப்பட்டினம் – 635112
வி​​லைரூ.200/-